லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் உத்தடழகி ஏஞ்ஜெலீனா ஜூலியைப் போன்ற உருவம் கொண்ட லூமினிடா பெரிஜோக் என்ற பெண் தன்னைக் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக டாக்சி டிரைவர் ஒருவர் பரபரப்பாக கூறியுள்ளார். ருமேனியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த டிரைவரின் பெயர் நிக்கோல் ஸ்டான். 34 வயதாகிறது. 3 குழந்தைகளுக்குத் தந்தை ஆவார்.
இந்த சம்பவம் குறித்து நிக்கோல் கூறுகையில், நான் மாடல் அழகியான பெரிஜோக்கை அவரது வீட்டுக்கு டாக்சியில் அழைத்துச் சென்றேன். வீட்டுக்கு வந்து இறங்கியவுடன் தனது பேக்கை தூக்கிக் கொண்டு வர உதவுமாறு கோரினார். இதையடுத்து நான் உதவி செய்தேன். பேக்குடன் வீட்டுக்குள் சென்று மாடிப்படியில் ஏறிச் சென்று வைத்து விட்டுத் திரும்பினேன்.
அப்போது அவர் என்னை கிச்சனுக்குள் வருமாறு அழைத்தார். அங்கு போனபோது தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கூறினார். நான் மறுக்கவே கத்தியை எடுத்து மிரட்டி வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டார்.
பின்னர் மீண்டும் ஒரு முறை உறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி மறுபடியும் என்னுடன் உறவு கொண்டார். அவருடன் நான் போராடியபோது எனது உடலில் கத்தி பட்டு காயம் ஏற்பட்டு விட்டது.
அவரிடமிருந்து மிகுந்த சிரமப்பட்டு நான் தப்பி வந்தேன். எனது மொபைல் போன் மூலம் போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன் என்றார் நிக்கோல்.
அவரது புகாரின் பேரில் தற்போது ருமேனியாவின், டுல்சி நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.