மருமகளை கற்பழித்த மாமா –ஆசை யாரைத்தான் விட்டதப்பா!

Written By piramyd on Tuesday, May 22, 2012 | 9:16 PM


பிரித்தானியாவில் தனது மகனின் மனைவியை மிகக் கொடூரமாக பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய 56 வயதான நபர் ஒருவருக்கு நேற்று (16) நீதிமன்றத்தால் ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவரே மிக மோசமாக பாலியல் துன்புறுத்தப்பட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டில் நிச்சயத் திருமணம் மூலம் (arranged marriage) தனது 18 ஆவது வயதில் இந்தப் பெண் பிரித்தானியா வந்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் வீட்டுக்கு நேரஞ்சென்று வந்துகொண்டிருந்த கணவன் பின்னர் வீட்டுக்கு வராமலேயே போய்விட, மாமனார் வீட்டில் கைவிடப்பட்ட மருமகளை மாமனார் தனது பாலியல் அடிமையாக நடத்தியுள்ளார்.

இந்த சித்திரவதைகள் தொடர்பில் எவரிடமும் முறையிட கூடாதென புனித குர்ஆன் மீது சத்தியம் வாங்கியுள்ள மாமனார், தன்னுடைய இச்சைக்கு இசைந்து நடக்காவிட்டால், மகனுடன் தாம்பத்யத்தில் ஈடுபட மறுப்பதான பொய் புகாரில் விவகாரத்து பெற நேரிடும் என மிரட்டியுள்ளார்.

பேசி நடைபெற்ற திருமணத்தின் பின்னர், பாகிஸ்தானிலிருந்து பிரித்தானியா வந்தவுடனேயே மருமகளின் கடவுச்சீட்டு, நகைகள் என்பவற்றை மாமனார் பறிமுதல் செய்துள்ளார்.

Screwdriver கொண்டு மருமகளின் கரங்களைக் கீறி, iron ஆல் சுட்டு, மிக வக்கிரமாக நடந்துகொண்டு அவள் மீதான தனது உரிமையை நிலைநாட்ட முயன்றுள்ளார் இந்த நபர்.

தனது மனைவி வெளியே சென்றிருக்கும் நேரங்களில் அவசரமாக மருமகளுடன் உறவு கொள்வதற்காக அவள் உள்ளாடைகள் அணிவதற்கும் தடைவிதித்துள்ளான்.

தன்னுடன் சேர்ந்து ஆபாசப் படங்களை பார்ப்பதற்கும் நிர்ப்பந்தித்துள்ளான்.

ஆங்கில மொழியறிவு இல்லாத காரணத்தினால் மூன்று மாதங்களாக இது குறித்து முறைப்பாடு செய்ய முடியாமல் அந்தப் பெண் தவித்துள்ளார்.

பின்னர் ஓரளவு ஆங்கிலம் கற்றுக் கொண்டு 999 என்ற அவசர பொலிஸ் முறைப்பாட்டு இலக்கத்திற்கு அழைத்து தமக்கு ஏற்பட்ட கொடூரங்கள் தொடர்பில் கூறியுள்ளார்.

இந்த முறைப்பாட்டை கேட்ட பொலிஸார் விரைந்து செயற்பட்டு சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு மே 01 முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதிவரை இந்தப் பெண்ணை பாலியல் அடிமையாக நடத்தியமைக்காக 56 வயதான குறித்த நபருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஏழாண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.