மாணவியொருவரை குடையால் தாக்கியதால் சிறுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மினுவாங்கொட நாலந்த மகளீர் பாடசாலையின் ஆசிரியை ஒருவரை பொலிஸார் இது தொடர்பாக கைதுசெய்துள்ளனர் என அறியப்படுகிறது. சம்பவத்தில் பாடசாலையில் கல்விபயிலும் 12ஆம் ஆண்டு மாணவியே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காசோலை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே சம்பவத்திற்கு காரணம் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பொலிஸார் ஆசிரியை கைதுசெய்த போதிலும் இரு தரப்பினரும் சமரசம் செய்துகொண்டதை அடுத்து ஆசிரியை விடுவிக்கப்பட்டார் என்றும் மேலும் அறியப்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கிறது. இது தொடர்பாக பல முறைப்பாடுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
காசோலை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே சம்பவத்திற்கு காரணம் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பொலிஸார் ஆசிரியை கைதுசெய்த போதிலும் இரு தரப்பினரும் சமரசம் செய்துகொண்டதை அடுத்து ஆசிரியை விடுவிக்கப்பட்டார் என்றும் மேலும் அறியப்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கிறது. இது தொடர்பாக பல முறைப்பாடுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.